Maruthuvamum Moodanambikaigalum - மருத்துவமும் மூடநம்பிக்கைகளும் - Medicine and Superstition (Tamil Book)
பிறந்த குழந்தைகள் அனைவரும் நாத்திகர்களே! குழந்தை இன்றைக்கே பிறந்திருந்தாலும் தன் தேவைக்கு அழும். “அழுத பிள்ளை பால் குடிக்கும்’ என்ற சொலவடையை நாம் கேட்டிருக்கிறோமில்லையா? பசிக்கும், தூக்கத்திற்கும் தான் குழந்தை பிறந்த நாள் முதல் அழுமே தவிர, “சாமி கும்பிட வேண்டும்” என்று எங்காவது குழந்தை அமுததாகக் கேள்விப் பட்டிருக்கிறோமா? குழந்தை வளர வளர பெற்றோர்கள் கடவுளைக் குழந்தைக்கு அறிமுகப்படுத்துகின்றனர். அதுவும் ‘கண்ணைக் குத்தி விடும்’, ‘தண்டித்து விடும்’ என்றெல்லாம் மூளையில் பயத்தை விதைத்து பக்தியைத் திணிக்கின்றனர். அதனால் தான் ‘பக்தி’ என்று மட்டும் கூறாமல் ‘பயபக்தி’ என்றே கூறுகின்றனர். கடவுளையே பயத்தின் மூலம்தான் மனதில் விதைக்கும் பொழுது, பேயைப்பற்றிக் கூற வேண்டியதில்லை. உலகத்தின் எல்லா இடங்களிலும், எல்லா மதங்களிலும் கடவுளைப் பற்றி குறிப்பிடப்படுவதுபோல். பேயைப் பற்றியும் குறிப்பிடாமல் இருந்ததில்லை.






Reviews
There are no reviews yet.