“நான் ‘ராமசாமி’ என்ற தனிப்பட்ட (Personal) தன்மையில் பேசவில்லை. பொதுஜனத் தொண்டன். பொதுமக்களுக்காகப் பாடுபடுகிறவன். அவர்களுக்காக எந்தத் தியாகமும் செய்யத் தயாராக இருக்கிறவன் என்ற முறையில் கீழ்ஜாதிக்காரர்கள் ‘சூத்திரர்கள்’ என்று சொல்லப்படுபவர்களின் பிரதிநிதி என்ற முறையில் பேசியிருக்கிறேனே தவிர, என் சொந்த நலத்திற்காக நான் அவ்விதம் பேசவில்லை.
பொதுவாக, பார்ப்பன ஜட்ஜுகள் யாராக இருந்தாலும், அவர்களுடைய நடத்தையில் சட்டத்தைப் பொறுத்து எப்படி நடந்து கொண்டாலும், தமிழனுக்குத் தன்னாலான கேடு செய்து அழுத்தவோ, அழிக்கவோ செய்ய வேண்டியது அவர்கள் ஜாதி-மதக் கடமை என்பதும், இதில் யாரும் எந்தப் பார்ப்பனரும் மறந்தும் தவறி நடக்க மாட்டார்கள் என்பதும், இந்த நிலை ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டியது மற்றவர் கடமை என்பதும்தான்.”






Reviews
There are no reviews yet.